பொருத்து வீடுகள் தொடர்பில் மக்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்
Thursday, March 31st, 2016
பொருத்து வீடுகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களைப் பெறும் நோக்கில் யாழ். மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களிலும் அபிப்பிராயப் பேட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.
வடக்குக் கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத் திட்டம் தற்போது பல தரப்பினராலும் எதிர்க்கப்பட்டு வருகின்ற நிலையில் இது தொடர்பில் மக்களின் அபிப்பிராயங்களைப் பெறுவதற்காக மாவட்ட செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காகப் பிரதேச செயலகங்களின் வரவேற்புப் பிரிவில் அபிப்பிராயப் பெட்டிகள் தொங்க விடப்பட்டுள்ளன.
பொறுத்து வீடுகளை விரும்பும் பயனாளிகளின் அபிப்பிராயங்கள் கிடைத்ததும் அவற்றைப் பெற்றுக் கொடுக்கவே தற்போது சகல பிரதேச செயலகங்களிலும் இந் நடைமுறை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இனி குறைந்த செலவில் மின்சாரம் கிடைக்கும்.!
காணாமல் போயிருந்த மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக அறிவிப்பு!
எக்காரணம் கொண்டும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது - தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவ...
|
|
|


