அமரர் பிரதீபன் சகீனின் இறுதி நிகழ்வில் பங்கேற்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Monday, August 24th, 2026
……..
வீதி விபத்தில் அகால மரணமடைந்த
பிரதீபன் சகீனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா
அமரரது பூதவுடலுக்கு
மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.
கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன் அவர்களின் மருமகளின் மகனான அமரர் சகீனின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் வடமராட்சி, அல்வாயில் உள்ள அன்னாரது இல்லத்தில் இன்று (24) நடைபெற்ற நிலையில் அங்கு சென்ற செயலாளர் நாயகம் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அமரரது உறவுகளுக்கு ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.
இதன்போது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேக செயலாளர் தயானந்தா, கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன், ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந், சிரேஸ்ர முக்கியஸ்தர் கமலேந்திரன் கந்தசாமி, யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, மற்றும் கட்சியின் தோழர்கள் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











000
Related posts:
|
|
|


