தரம் 5 புலமை பரிசில் பரீட்சை – ஒரு மாதத்திற்குள் முடிவுகளை வெளியிட முடியும்  – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்!

Saturday, August 15th, 2026


….
ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்கள் மதிப்பீடு ஓகஸ்ட் 20 ஆம் திகதி தொடங்கும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மதிப்பீட்டு செயல்முறை ஒப்பீட்டளவில் குறுகிய காலத்திற்குள் நிறைவடையும் என்றும், இதன்மூலம் சுமார் ஒரு மாதத்திற்குள் முடிவுகளை வெளியிட முடியும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெற்றதுடன், நாடு முழுவதும் மொத்தம் 294,089 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

அதன்போது, சிங்கள மொழியில் 220,366 மாணவர்களும், தமிழ் மொழியில் 73,723 மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts: