பெறுமதி சேர் வரியை  ஆகஸ்ட் 20 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் – உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவுறுத்து!

Thursday, August 13th, 2026


……
2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான பெறுமதி சேர் வரியை (VAT) எதிர்வரும் ஆகஸ்ட் 20ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

வரி செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

காசோலை, வங்கி வரைவோலை அல்லது கொடுப்பனவு ஆணை மூலம் மேற்கொள்ளப்படும் வரி செலுத்துகை, உரிய காலக்கெடுவுக்குப் பின்னர் கிடைத்தால் அதுவும் தாமதமான செலுத்துகையாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜூலை மாதத்திற்கான VAT வரி அறிக்கையை ஆகஸ்ட் 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், குறித்த வரி அறிக்கையை இணையவழி முறையில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தடுத்து வைக்கப்படும் வரியை ஆகஸ்ட் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் செலுத்துமாறும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் வரி செலுத்துவோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

00

Related posts: