அதிக சத்தம் எழுப்பப்பட்டால் 1 மில்லியன் வரை அபராதம் – வருகின்றது தேசிய சுற்றுச் சூழல் சட்டத்தில் திருத்தம்!

Monday, August 10th, 2026


……
பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் மூலம் அதிக சத்தம் எழுப்பப்பட்டால், ரூ. 1 மில்லியன் வரை அபராதம் அறவிடக்கூடிய வகையில் தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கபில மகேஷ் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் தொந்தரவு ஏற்படுத்தும் இரைச்சல்களுக்கு (சத்தங்களுக்கு) எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையில் தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் புதிய திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts: