அமரர் சரஸ்வதியின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி!

Thursday, July 16th, 2026


காங்கேசன்துறை, தையிட்டி பகுதியை சேர்ந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயற்பாட்டாளர் சுப்பிரமணியம் அவர்களின் பாரியார் சரஸ்வதியின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்

கடந்த 14 ஆம் நாளன்று தனது 64 ஆவது வயதில் காலமானார்.

இன்நிலையில் இன்று (16) அன்னாரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய செயலாளர் நாயகம், அமரரின் உறவுகளுக்கும் தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தார்.

இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், ஊடக செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த், வலி வடக்கு நிர்வாக செயலாளர் ஜெயபாலசிங்கம் – அன்பு,  பிரதேச சபை உறுப்பிப்பினர் சிதரன் உள்ளிட்ட பலரும்  அஞ்சலிமரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது


000

Related posts: