யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை – கூரிய வாள்களுடன் ஐவர் பொலிசாரால் கைது!

Friday, July 10th, 2026


……..
திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர்
யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு உரியதாக சந்தேகிக்கப்படும் கார் ஒன்றும் குறித்த சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருகையில் –

யாழ் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் கடந்த 5 ஆம் திகதி ஒரு இளைஞனை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்திச் சென்றுள்ளது

கடத்தப்பட்ட இளைஞனை கைதடிக்கு கொண்டுசென்ற குறித்த கும்பல் அவ் இளைஞனை உடைகளை களைந்து சித்திரவதை செய்தபின் காயங்களுக்குள்ளான நபரை
யாழ் பொஸ்கோ பாடசாலை அருகில் கொண்டுவந்து விடுவித்துள்ளனர்.

இன்னிலையில் குறித்த கார் வேகமாக ஓட்டி சென்றபோது வீதிக்கடமையில்  இருந்த பொலிஸ் இடைமறித்த்போது நிறுத்தாது வேகமாகச் சென்றுள்ளது.

சந்தேகமுற்ற பொலிசார் குறித்த “காரை” துரத்திச் சென்று இடைமறித்து சொதித்துள்ளனர்.

சோதனையின் போது காருக்குள் இருந்து இரு கூரிய “வாள்”கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் காரின் கதவு மற்றும் ஆசனங்களில் இரத்த கறையும் அவதானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒரு “சேட்”டும்  இரத்தங்களுடன் மீட்கப்பட்டது.

இதையடுத்து பொலிசார் குறித்த ஐவரிடமும் விசாரணை நடத்தியதில்ப் 2 .5 கிராம் ஐஸ் போதையும் மீட்கப்படுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை பொலிசாதின் சாதுரியத்தால் கண்டறியப்பட்ட குறித்த கடத்தலுடன் தொடர்புடைய இளைஞன் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரத்னவின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:

நாளைமுதல் நெடுந்தீவு - குறிகாட்டுவான் படகு சேவை மீண்டும் ஆரம்பம் - நெடுந்தீவு பிரதேச செயலாளர் சத்திய...
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் விஜயம் – அந்நாட்டின் முக்கிய தலைவர்க...
நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிக்காவிடின் அரசுக்கு எதிராக  விவசாயிகளை வீதிக்கு இறக்குவோம் - தேசிய ...

வரும் 24 ஆம் திகதிமுதல் 27 ஆம் திகதிவரை நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வரும் -...
வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதை இனி மேற்கொள்ள முடியாது - அரச அச்சக அதிகாரி கங்கானி கங்கானி லியனகே தெ...
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்காக மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு - கவனம் செலுத்...