ஓய்வூதியங்களை வழங்குவதில் தாமதங்களை குறைக்க இணையவழி விழிப்புணர்வு!
Thursday, July 9th, 2026
….
ஓய்வுபெறும் அரச அதிகாரிகளுக்கு ஓய்வூதியங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில், ஓய்வூதியத் திணைக்களம் இன்று (09) முதல் விசேட இணையவழி விழிப்புணர்வுத் தொடர் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.
அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஓய்வுபெறத் திட்டமிட்டுள்ள அதிகாரிகளுக்கு, தேவையான நடைமுறைகளைச் சரியாகப் பூர்த்தி செய்து, ஓய்வூதியப் பலன்களைத் தடையின்றிப் பெற்றுக்கொள்வதற்கான வழிகாட்டல்களை இந்தத் திட்டம் வழங்கவுள்ளது.
அரச அதிகாரி ஒருவர் ஓய்வூதியத்தை எந்தவித தாமதமும் இன்றிப் பெறுவது அவரது உரிமையாகும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஓய்வுபெறும் அதிகாரிகள், தமது ஓய்வுக்கால வாழ்க்கையை எவ்வித சிக்கலுமின்றி ஆரம்பிக்க இந்த முயற்சி கைகொடுக்கும் என அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
இலங்கையை சீரழிக்க சதி - போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்படும் - புலனாய்வு ...
வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி கோரிக்கை!
இலங்கைக்கு போதிய டெஸ்ட் போட்டிகள் கிடைக்கவில்லை - மத்தியூஸ் பெரும் அதிருப்தி!
|
|
|


