நெடுந்தீவு – குறிகாட்டுவான் அரச படகுச்சேவையை திங்களில் அதிகரிக்க ஏற்பாடு!
Sunday, June 21st, 2026நெடுந்தீவுக்கான அரச கடற் போக்குவரத்து சேவை எதிர்வரும் திங்கட்கிழமை (22/06) தொடக்கம் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் அதிகரிக்கப்பட்ட வகையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒவ்வொரு திங்களும் நெடுந்தீவில் இருந்து காலை 6.15 மணி , காலை 6.45 மணி ஆகிய நேரங்களில் குறிகாட்டுவான் நோக்கி புறப்பட்டு மீண்டும் குறிகாட்டுவானில் இருந்து காலை 7.30 மணி,
காலை 8.30 மணி ஆகிய நேரங்களில் நெடுநதீவை நோக்கிச் செல்ல ஏற்பாடாகியுள்ளதுடன் மாலைநேர சேவையில் தேவையேற்படின் மேலதிக அரச படகுகளை சேவையில் ஈடுபடுத்தவும் ஏற்பாடாகியுள்ளது.
நெடுந்தீவு – குறிகட்டுவான் இடையேயான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள வடதாரகை , நெடுந்தாரகை என்பன திருத்தவேலைகள் முடிந்து தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
000
Related posts:
அமைச்சர் பைஸர் முஸ்தபாவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை?
யாழ். பல்கலையின் பிரதித் துணைவேந்தர் நியமனம்!
உயர்தரப் பரீட்சை ஒக்டோபரில் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|


