வலி வடக்கு மக்களின் எதிர்பார்ப்புக்கள் – ஈ.பி.டி.பியின் பிரதேச சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்!
Monday, May 18th, 2026
….
வலி வடக்கு மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் ஈ.பி.டி.பி. பிரதேச சபை உறுப்பினர்களின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், பிரதேச சபையின் கடந்த மாதாந்த அமர்வு பற்றிக் கலந்தரையாடப்பட்டது.
அத்துடன் இந்த மாதத்திற்கான சபை அமர்வில் பிரஸ்தாபிக்கப்பட வேண்டிய அம்சங்கள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது
இக்கலந்துரையாடலில், வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் வட்டாரக்கு குழு உறுப்பினர்களுள் ஒரு பகுதியினரும் பங்குபற்றி வட்டார ரீதியான தேவைப்பாடுகளை சுட்டிக்காட்டி கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எமக்கு சகல தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் - பல்கலை மாணவர் ஒன்றியம்!
மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவுள்ள பிரதமர்!
லொத்தரில் பரிசு விழுந்ததாக வரும் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும் -இலங்கை மத்திய வங்கி!
|
|
|


