பகுப்பாய்வு ஆய்வுகள் நடைபெறும் வரை எரிந்த பகுதி பொலிசாரின் கட்டுப்பாட்டில் – MP ஸ்ரீபவானந்தராஜா!

Saturday, May 9th, 2026



…..

பகுப்பாய்வு திணைக்களத்தின் ஆய்வுகள் நடைபெறும் வரை யாழ் போதனா வைத்தியசாலையின் எரிந்து நாசமான மருத்துவக் களஞ்சியப் பிரதேசம் பொலிசாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என தெரிவித்துள்ள யாழ் போதனா வைத்தியசாலையின் முன்னாள் உதவிப் பணிப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீபவானந்தராஜா குறித்த அனர்த்தத்தினால் வைத்தியசாலக்கு பல கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

இன்று அதிகாலை 1.30 அளவில் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிகின்றது.

யாழ் போதனாவின் பிரதான மருந்து களஞ்சியத்தில்   புற்றுநோய்  உள்ளிட்ட அதி தீவிர சிகிச்சைககான பிரதான மருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளன.


தற்போது இது தொடர்பான உள்ளக விசாரணைகள், மற்றும் பொலிஸ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

000

Related posts:


யாழ்ப்பாணத்திலும் ஒரேநாளில் கடவுச்சீட்டை விநியோகிக்க நடவடிக்கை - அமைச்சர் தம்மிக்க பெரேரா !
சட்டத்தை அமுல்படுத்தும் பிரிவினரால் கைப்பற்றப்படும் ஹெரோயின் மீண்டும் சந்தைக்கு வரும் நிலை காணப்படுக...
இலங்கை கிரிக்கெட்க்கு இடைக்கால குழு நியமனம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து வெளியானது ...