சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிள் விபத்து – புங்குடுதீவு இளைஞன் பலி!

Wednesday, May 6th, 2026


யாழிலுள்ள தனியார் விடுதியொன்றின் சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மோதித் தள்ளியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

குறித்த சம்பவம் இன்று முற்பகல் வேலணை புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் இடம்பெற்றது.

இந்த அனர்த்தத்தின் போது 10 ஆம் வட்டாரம் புங்குடுதீவைச்  சேர்ந்த 21வயதுடைய சிறிரமனன் நிதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

Related posts:


யாழ்ப்பாணத்தில் மின்சக்தி திட்டம் - இந்திய - இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையே கைச்சாத்து!
மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பில் உதய கம்மன்பில தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது - சபாநாயகர் த...
மாடுகளை திருடும் நபர்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகும் - விவசாய அமைச்சு எச்சரிக்கை!