மருதனார்மடம் பகுதி கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபரின் சடலம்!
Tuesday, April 7th, 2026மருதனார்மடம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்று அவதானிக்கப்பட்டது.
மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வளாகத்தில் உள்ள கிணற்றிலேயே இவ்வாறு சடலம் காணப்படுகிறது.
அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்
000
Related posts:
50 கிலோ கஞ்சா மீட்பு : மூவர் கைது!
தனி ஒரு சிகரட் விற்பனை செய்வதற்கான தடை வரவேற்புக்குறியது - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!
இணையத்தள மோசடி குறித்து 1600 முறைப்பாடுகள்!
|
|
|


