சீனா – இந்தியா இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்!…

Sunday, November 9th, 2025


ஷாங்காய்-டெல்லி இடையேயான பயணிகள் விமான சேவையை சீனா ஈஸ்டர்ன் நிறுவனம் இன்று(9)  முதல்  ஆரம்பமாகிறது.

கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது.

அதன்பின், லடாக் எல்லைப் பிரச்சனை காரணமாக நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் எழுந்தது.

இதற்கிடையே, அமெரிக்கா உடனான பனிப்போருக்கு மத்தியில் இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியும், சீனஜனாதிபதி ஷிஜின்பிங்கும் சந்தித்துப் பேசியது இதற்கு அடித்தளமாக அமைந்தது.

இதையடுத்து, இந்தியா – சீனா இடையேயான நேரடி விமான சேவை விரைவில் தொடங்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

அதன்படி, கொல்கத்தா-குவாங்சூ இடையிலான இண்டிகோ விமான சேவை கடந்த மாதம் தொடங்கியமையும் குறிப்பிடத்தக்கது
099

Related posts:

யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகளவு விபத்துக்கள் - மோட்டார் திணைக்களத்தின் விபத்து இணைப்பிரிவு!
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவு அருகே 9 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கை...
இலங்கை தொலைத் தொடர்புகள் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது - உயர்நீதிமன்றம் வியா...