சட்டவிரோத மணலுடன் “கன்ரர் ” –  சட்டத்தை ம்டுக்கிவிட்ட யாழ் பொலிசார்! …….

Monday, October 13th, 2025


யாழ்பாணம் அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்டர் வாகனத்தை நேற்று  திங்கட்கிழமை யாழ்ப்பாண  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது –

அரியாலைப் பகுதியில் சட்ட விரோத மணல் கடத்தல் இடம் பெறுவதாக  அண்மையில் புதிதாக யாழ்ப்பாண பிரதான பொலிஸ்  அதிகாரியாக பொறுப்பேற்ற பாலித்த செனவிரட்னவின் பணிப்புரையில் குறித்த பகுதிக்குச் சென்ற பொலிசார் இலக்கத் தகடற்று மணல் ஏற்றிக் கொண்டிருந்த குறித்த வாகனத்தை கைப்பற்றினர்.

சம்பவத்தில் எவரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00000

Related posts:


ஐந்து  கோரிக்கைகளை முன்வைத்துத் தபால் ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் யாழிலும் முன்னெடுப்பு!
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் அமெரிக்காவிடம் இருந்து 4,700 பிசிஆர் கருவிகள் இலங்...
எத்தகைய திறமையை வெளிப்படுத்தினாலும் ஒழுக்கம் அவசியம் - நிரோஷன் திக்வெல்லவுக்கு தெரிவுக் குழுத் தலைவ...