60 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் – பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவிப்பு!
Friday, October 10th, 2025
……..
நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக உயர் தரத்தில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
“கல்வியில் ஏற்படும் கடுமையான மன அழுத்தம் பெற்றோருடனான பிரச்சினைகள், சமூக ஊடகங்கள் பயன்பாடு, உடல் ரீதியான அழுத்தம் போன்றவையே இந்த மன அழுத்தத்துக்கு காரணம் என மனநல சோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல வைத்திய நிபுணர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்துள்ளார்.
இன்று (10) உலக மனநல தினமாகும் இதை முன்னிட்டு பேராசிரியர் கருத்துக் கூறும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
000
Related posts:
வறிய நாடுகளின் தரவரிசையில் இலங்கை 36வது இடத்தில்!
அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கு நீர்கொண்டுவரும் புலிக்குளம் திட்டம் ஆரம்பம்!
பிரதமர் ரணில் பணிப்புரை - எதிர்வரும் ஜூன் மாதம்முதல் பிரதமர் அலுவலகத்தின் செலவீனங்களை50 சதவீதமாக குற...
|
|
|


