நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு!

Friday, October 3rd, 2025


மானிப்பாய் பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

காணி ஒன்றை பண்படுத்தல் மேற்கொண்டபோதே குறித்த வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த தகவல் மானிப்பாய் பொலிசாருக்கு வழங்கப்பட்டதை அடுத்து மானிப்பாய் பொலிசார் விசேட அதிரடி படையினர் குறித்த காணியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்

இன்றையதினம் (03) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் குறித்த வெடிபொருட்கள் விசேட அதிரடி படையினரால் அகற்றப்படவுள்ளதாக பொலிஸ் வட்டாடங்கள் தெரிவிக்கின்றன

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
000

Related posts:

இருதய சிகிச்சைகள் நாளைமுதல் விக்ரோரியா வீதியில் அமைந்துள்ள சிகிச்சை நிலையத்தில் இடம்பெறும் - யாழ்.போ...
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் போது விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளின் போலித்தனம் அம்பலமாகியுள்ளது – அமைச...
வெகு சிறப்பாக நடைபெற்ற யாழ். அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் விளையாட்டு அரங்கு திறப்புவிழா!   .