பகிடிவதை தடுப்பு வழிகாட்டல்கள் அவசியம் – அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!
Thursday, July 10th, 2025
பல்கலைக்கழகங்களில் பகிடிவதை சம்பவங்களை தடுக்க தற்போது நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின் தொகுப்பை அவசியம் அமுல்படுத்துமாறு உயர் நீதிமன்றம் நேற்று (09) பல்கலைக்கழக மானிய ஆணையத்திற்கு (UGC) உத்தரவிட்டது.
அந்த வழிகாட்டுதல்களை திறம்பட செயல்படுத்த தேவையான நிதி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வசதிகளை வழங்குமாறு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருக்கு நீதிபதிகள் குழு உத்தரவிட்டது.
ஷிரான் குணரத்ன, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட குழு இந்த நீதிமன்ற உத்தரவை பிறப்பித்தது.
இந்த உத்தரவுகளை செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மறுபரிசீலனை செய்ய வழக்கை 2026 ஜனவரி 14 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க நீதிபதிகள் மேலும் உத்தரவிட்டனர்.
000
Related posts:
தேங்காய் மட்டைகளைக் கொள்வனவு செய்வதற்குத் தனியார் நிறுவனம்!
அர்த்தம் மாறுப்படும் வகையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை சட்டவிரோதமானது - சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட...
திரைப்பட நடிகை குஸ்பு மட்டும் புலிகளை பயங்கரவாதிகள் என கூறவில்லை – கூட்டமைப்பின் பலரம் அவ்வாறே கூறிவ...
|
|
|


