இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வான் 70 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து – எட்டு பேர் பலத்த காயம்!
Thursday, July 10th, 2025
மாத்தறையிலிருந்து நுவரெலியாவுக்கு இளைஞர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று, வீதியை விட்டு விலகி 70 அடி பள்ளத்தில் விழுந்ததில், வேனில் பயணித்த எட்டு பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 5:00 மணியளவில் ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் தோட்ட பகுதியில் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களை டெஸ்போட் பகுதியில் உள்ள மக்கள் மீட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார், வேனின் சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் வேனுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
000
Related posts:
அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு!
பொலிஸ் நிலைய உப பரிசோதகர் மரணம்!
இணைந்த நேர அட்டவணை செயற்பாடுகளுக்கு இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலையினர் ஒத்துழைக்கவில்லை ...
|
|
|
பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்க யாழ் வர்த்தக சங்கம் விஷேட திட்டம் - வீடுகளில் இருந்து பொருட் கொள்வன...
பிரச்சினைகளைக் கண்டு அஞ்சி ஒழியக் கூடாது - வரவு செலவு திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் – ...
சர்வதேச தரத்திலான மருத்துவ வசதிகளை வழங்க யாழ் நகரில் நெரிசலற்ற சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் – யாழ்.ப...


