வழுக்கையாற்றைப் புனரமைத்து நிலத்தடி நீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய யாழ் பல்கலை மாணவர் ஆய்வு –
Saturday, June 21st, 2025
யாழ்ப்பாணத்தில் வழுக்கையாற்றைப் புனரமைப்பு செய்து நிலத்தடி நீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆய்வு ஒன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இன்று ஆரம்பித்தனர்.
யாழ்ப்பாணம் வறுத்தலைவிளான் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பிக்கும் வழுக்கையாற்றில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், அரச திணைக் களத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
குறித்த ஆராய்ச்சி பயணத்தில் வருத்தலைவிளான் பகுதியில் ஆரம்பிக்கும் வழுக்கையாற்று பயணம் அராலியில் முடிவடையவுள்ளது.
இதன்போது பொறியியலாளர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ பீடம் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related posts:
ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு 8.5 மில்லியன் யூரோ வழங்க தீர்மானம்!
20ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் !
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் - பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ...
|
|
|


