மீண்டும் கல்லூண்டாயில் எரிக்கப்படும் கழிவுப் பொருட்கள் – மக்கள் பெரும் அசௌகரியம்!
Sunday, April 27th, 2025
யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் கொட்டப்படும் இடமான கல்லூண்டாய் பகுதியில், கழிவுப் பொருட்களுக்கு தீ மூட்டியதால் வீதியில் செல்லும் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த பகுதியானது மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படுகிறது. அந்த பகுதியிலேயே மாநகர சபையினர் கழிவுகளை கொட்டுகின்றனர். இவ்வாறு கொட்டப்படுகின்ற கழிவுகள் இதற்கு முன்னரும் பல தடவைகள் எரியூட்டப்பட்டது.
இவ்வாறு இன்றையதினமும் எரியூட்டியதால் புகையும், துர்நாற்றமும் வீதியில் பயணிக்கும் பயணிகளை பல்வேறு அசௌகரியங்களுக்கு உட்படுத்தியது.
எனவே, மாநகர சபையின் இந்த செயற்பாட்டுக்கு மக்கள் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
000
Related posts:
தொடர்ந்து இருப்பது குறித்து தீர்மானிப்பேன் : அமைச்சர் சுசில்!
குடா நாட்டில் சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!
இலங்கை ஆடை ஏற்றுமதியில் 4.88% வருடாந்த வளர்ச்சிப் பதிவு - ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
|
|
|


