தோழர் இரவீந்திரனுக்கு ஆழ்மன அஞ்சலிகள் -செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, February 22nd, 2025

மக்களுக்காக தொடர்ந்து கொண்டிருக்கிற எமது பயணத்தில், இயற்கையும் அவ்வப்போது அதிர்ச்சிகளை எமக்களிக்க தவறுவதில்லை.

அவ்வாறான ஓர் அதிர்ச்சியாகவே தோழர் இரவீந்திரனின்(அம்பலவாணர் இரவீந்திரதாசன்) இறப்பு செய்தி அமைந்துள்ளது.

எமது சரியான அரசியல் வழிமுறைகளை ஏற்று செயற்பட்டவர். தேசிய நல்லிணக்கத்தினை அடிப்படையாக கொண்ட வழிமுறையே எமது மக்களுக்கு கெளரமான எதிர்காலத்தை பெற்றுத் தரும் என்ற யதார்த்தத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு தன்னால் முடிந்தவரை பாடுபட்டவர்.

இறுதிக் காலங்களில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த போதிலும், இறுதி மூச்சுவரை கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர்.

இவ்வாறான தன்னலமற்ற ஒரு தோழனின் இழப்பு எனக்கும் கட்சிக்கும் பேரிழப்பாகவே அமைந்திருக்கி்றது.

இந்நிலையில், தோழர் இரவீந்திரனின் இழப்பு ஏற்படுத்தியுள்ள வலிகளை சுமந்து நிற்கும் அன்னாரின் குடும்பத்தினர் மற்றும் தோழர்களுக்கு எனது ஆறுதலை தெரிவிப்பதுடன்,

மூத்த தோழர் இரவீந்திரனுக்கு ஆழ்மன அஞ்லிகளை உரித்தாக்குகிறேன்.

  • டக்ளஸ் தோனந்தா,
    செயலாளர் நாயகம்,
    ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)

Related posts:


இராஜதந்திர பணிகளில் தமிழர் பங்களிப்பு புறக்கணிக்கப்படுகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்...
உரிமைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் விவேகமற்ற அரசியல் தலைமைகளினால் வழிமாறிச் சென்று மக்களை கையேந்து...
உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராம விவகாரம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!