கல்சியத் தண்ணீரை குடித்த முடியவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழப்பு!
Monday, February 17th, 2025
யாழ்ப்பாணத்தில், கல்சியத் தண்ணீரை அருந்திய முதியவர் ஒருவர் கடந்த 15 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ராசன் மைக்கல் (வயது 85) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 14 ஆம் திகதி தவறுதலாக கல்சியம் கலந்த தண்ணீரை அருந்தியுள்ளார். இந்நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
000
Related posts:
வெள்ளவத்தை கட்டட சம்பவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை!
20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு ஜீன் மாதம் அரச நியமனம் - தேசிய கொள்கை பொருளாதார விவகார அமைச்சின் மேலதிக ...
கியூபாவை சென்றடைந்த ரஷ்ய எண்ணெய்க் கப்பல் - அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்!
|
|
|


