18 வயதுக்குட்பட்டவர்கள் பணம் செலுத்தி இணையத்தள விளையாட்டுகளில் பங்கேற்க தடை !
Sunday, February 9th, 2025
இந்தியாவின் தமிழ்நாட்டில் 18 வயதுக்குட்பட்டவர்கள் பணம் செலுத்தி இணையத்தள விளையாட்டுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது .
இணையத்தள விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் வகையில் ஓய்வு பெற்ற அரச நிர்வாக அதிகாரி நசிமுதீன் தலைமையில் Online Gaming Authority , இணையத்தள விளையாட்டுக்களின் விதிகளைக் கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளது .
பணம் செலுத்தி இணையத்தள விளையாட்டுகளில் உள்நுழைவதற்கு தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரை இணையத்தளத்தில் பணம் செலுத்தி விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது .
ஒரு மணி நேரத்திற்கு மேலாக விளையாடும் போது 30 நிமிட இடைவெளியில் எச்சரிக்கை செய்தி அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
000
Related posts:
நாடு திரும்பினார் ஜனாதிபதி!
காணாமல் போயிருந்த மீனவர்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக அறிவிப்பு!
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் குற்றச்சாட்டை விசாரிக்குமாறு அமைச்சர் கஞ்சன கோப் குழுத் தலைவர் ...
|
|
|
கஜீமாவத்தை தீ விபத்தில் 80 வீடுகள் தீக்கிரை - 220 பேர் இடம்பெயர்வு – பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான...
ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருவதில...
தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது தேர்தல்கள் ஆணைக்...


