நாகர்கோவில் மேற்கு பகுதியில் தீயில் எரிந்த வீடு – விசமிகளால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் குடும்பஸ்தர்!
Thursday, January 23rd, 2025
வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்கு பகுதியில் வீடு ஒன்று நேற்று (22) அதிகாலை தீப்பிடித்துள்ளது.
அதிகாலை 3.30 மணியளவில் வீடு தீப்பிடிப்பதை கண்ட குடும்பஸ்தர் கடும் முயற்சியின் பின் தீயை அணைத்துள்ளார்.
விசமிகளால் தனது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் குடும்பஸ்தர் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிசார் தீ பிடித்த வீட்டை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
000
Related posts:
வாகன விபத்துக்கள் அதிகரிப்பு - கடந்த 10 நாட்களில் 45 பேர் பரிதாபமாக உயிரிழப்பு - பொலிஸ் ஊடகப் பிரிவ...
40 ஆயிரம் ஹெக்டயார் நிலப்பரப்பு தொடர்பில் வெளியாகிறது வர்த்தமானி – கையொப்பமிடப்பட்டுள்ளதாக வனஜீவராசி...
ஜனாதிபதி தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி சர்வக்கட்சி மாநாடு!
|
|
|


