காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து – 38 பேர் உயிரிழப்பு!.
Monday, December 23rd, 2024
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. அந்நாட்டின் இகியுடர் மாகாணத்தில் புரிசா என்ற ஆறு பாய்கிறது.
இந்நிலையில், இகியுடர் மாகாணத்தில் இருந்து நேற்று இரவு அண்டை நகருக்கு புரிசா ஆற்றில் நேற்று படகு ஒன்று புறப்பட்டது. அந்த படகில் 150க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட பலர் தங்கள் சொந்த ஊருக்கு அந்த படகில் புறப்பட்டு சென்றனர்.
ஆற்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணித்த அனைவரும் ஆற்றில் தத்தளித்தனர். இந்த கோர விபத்தில் ஆற்றில் மூழ்கி 38 பேர் உயிரிழந்தனர். மேலும், 100 பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்புக்குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
000
Related posts:
ஐரோப்பிய ஒன்றியம் மீது துருக்கி குறிறச்சாட்டு!
இந்திய உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
நிபா வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
|
|
|
ஒரு இலட்சத்து 91 ஆயிரம் அமெரிக்க டொலர் பொறுமதியான கொரோனா மருத்துவ உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியது அம...
நேட்டோ படைகளுக்கு அச்சுறுத்தலாக வாக்னர்படை - ரஷ்ய முன்னாள் இராணுவ அதிகாரியின் கருத்தால் பரபரப்பு!
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீளாய்வுக்கு விண்ணப்பிப்பதற்க...


