அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்று!
Friday, November 1st, 2024
பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்றாகும். கடந்த 30 ஆம் திகதி, முதல் நாளாக அஞ்சல் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் காவல்துறை நிலையங்களில் இடம்பெற்றது.
இதற்கமைய முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக இன்று (01) சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அஞ்சல் மூல வாக்களிப்பினை மேற்கொள்ள முடியாத வாக்காளர்கள் எதிர்வரும் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் அவர்கள் பணிபுரியும் மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விநேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
மூன்று மாதத்தில் 91 பேர் எச். ஐ. வி யினால் பாதிப்பு!
நாடாளுமன்ற அமைதியின்மை தொடர்பான அறிக்கை 5 நாள்களில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும்!
இந்தியாவின் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பயணிகள் அனைவரும் அவசர கதவு வழியாக வெளியேற்றம...
|
|
|


