இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயம்!
Sunday, September 29th, 2024
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.
எதிர்வரும் நான்காம் திகதி அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
முன்னதாக அனுரகுமார திசநாயக்க புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை ஜெய்சங்கர் அவரை சந்தித்திருந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள் குறித்து ஆராயப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
இலங்கை பெண்களுக்கு ஓர்அரிய சந்தர்ப்பம்!
இரண்டு டோஸ்களையும் செலுத்தியவர்களை விமானத்தின் ஆசன அளவிற்கு ஏற்ப இலங்கைக்கு அழைத்துவர அனுமதி !
கைச்சாத்தானது திருகோணமலை எண்ணெய் தாங்கி குறித்த ஒப்பந்தம்!
|
|
|


