பிரசார பணிகளின் போது, வாக்காளருக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
Tuesday, August 20th, 2024
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தமது பிரசார பணிகளின் போது, வாக்காளருக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, தேர்தல் பிரசாரத்தின் போது ஒரு வாக்காளருக்காக வேட்பாளர் ஒருவர் 109 ரூபாவையே செலவிட முடியும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் வேட்பாளர்களுக்கிடையே இடம்பெற்ற நிலையில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, வேட்பாளர் ஒருவரின் மொத்த செலவினமாக 186 கோடியே 82 இலட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
எனது அரசியல் பயணத்தை எவரும் அஸ்தமனம் செய்துவிட முடியாது - முதலமைச்சருக்கு சவால் விடுத்த அவைத் தலைவர்...
நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை - வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறல்!
அமெரிக்காவுக்கு விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி – அடுத்த வாரம் ஜேர்மன் செல்லவுள்ள...
|
|
|


