கடலில் மிதந்து வந்த பானத்தை பருகி மரணமான கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Monday, August 12th, 2024

ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவேளை கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த பாணத்தை குடித்து மரணமான கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை இன்று சந்தித்தனர்.

இறந்தவர்களுக்கான நஷ்ட ஈடு தொடர்பாக அமைச்சர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவித்த குடும்பத்தினர், விரைவாக குறித்த நஷ்ட ஈடுகள் கிடைக்க உதவுமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இச்சந்திப்பின்போது அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

000

Related posts:

கோழிப் பண்ணையால் தொற்றுநோய்த் தாக்கம்: தீர்வு பெற்றுத் தருமாறு சண்டிலிப்பாய் மக்கள் டக்ளஸ் தேவானந்தா...
யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களுக்கு முழுமையான வாழ்வாதார ஏற்பாடு வேண்டும் - நாடாளுமன்றில் ட...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்ட...

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி மக்களுக்கு பாதிப்பாக அமையக் கூடாது - டக்ளஸ் தேவானந்தா சபையில் வலிய...
நீண்டகால யுத்தம், தவறான அரசியல் வழிநடத்தல் தமிழ் சமூகத்தை சீரழித்துள்ளது - சர்வமத பிரதிநிதிகள் சந்தி...
இரணைதீவுக்கு விஜயம் செய்து தீர்வுக்காக நிலைமைகளை நேரில் ஆராய்வேன் - டக்ளஸ் தேவானந்தாவிடம் ஆளுநர் தெர...