பங்களாதேசத்தை கட்டியெழுப்ப அன்பும் அமைதியுமே தேவை – பங்களாதேச தேசிய கட்சித் தலைவர் கலிதா ஜியா தெரிவிப்பு!
Thursday, August 8th, 2024
பங்களாதேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப அன்பும் அமைதியுமே தேவை என்று சிறையில் இருந்து விடுதலையாகியுள்ள பங்களாதேச தேசிய கட்சித் தலைவர் கலிதா ஜியா தெரிவித்துள்ளார்.
அதன்படி நாம் இந்த நாட்டை வளமான நாடாக சீர்திருத்த வேண்டும் என்றும் இளைஞர்கள்தான் நமது எதிர்காலம். அவர்களின் கனவை நிறைவேற்ற, ஜனநாயக முறையில் பங்களாதேசத்தை புதிதாக கட்டமைக்க வேண்டும்.
இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.அத்துடன் அழிவு, கோபம், பழிவாங்கலுக்குப் பதிலாக நம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப நமக்குத் தேவை அன்பும் அமைதியுமே என அவர் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
பொலித்தீன்களில் எண்ணெய் உற்பத்திசெய்யத் திட்டம் - கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் !
நாட்டின் பல பாகங்களில் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம்!
தலைப்பிறை தென்படவில்லை – நாளை நோன்பு ஆரம்பம் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு!
|
|
|


