முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானம் – இறக்குமதிக்கு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு!
Tuesday, August 6th, 2024
முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு முட்டைகளை இறக்குமதி செய்யவுள்ளதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
தான்தோன்றித்தனமான அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் மத்தலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளதன் காரணமாக முட்டைகளைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், அரசாங்கம் நிவாரணங்களை வழங்கும் பட்சத்தில் முட்டைகளைக் குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சுகாதார சேவைகள் சீர்குலைவதை தவிர்க்க யோசனைகள் முன்வைத்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் !
மாணவர்கள் ஒன்று கூடியதால் யாழ்ப்பாணம் பல்கலைகழகத்திற்கு முன்பாக பதற்றம் - பொலிஸார், இராணுவத்தினர் க...
செப்டெம்பருக்கு முன்னர் தேர்தல் - முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த வெளியிட்டுள்ள தகவ...
|
|
|


