ஆப்கானிஸ்தானைபுரட்டியெடுத்த சூறாவளி – 40 பேர் பலி – 230 இற்கும் மேற்பட்டோர் காயம்!
Tuesday, July 16th, 2024
ஆப்கானிஸ்தானில் பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காரணமாக சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்று திங்கட்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது மேலும் 230 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சூறாவளி மற்றும் மழை காரணமாக மரங்கள் மற்றும் வீடுகள் கூரைகள் இடிந்து வீழ்ந்துள்ளன. இதன்காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த மே மாதம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக நூறிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
செவாலியே விருது பெறுகின்றார் கமல்ஹாசன்!
புதிய அரசியலமைப்பிலும் ஒற்றை ஆட்சிதான் உறுதியானது: இனியும் மக்களை ஏமாற்ற வேண்டாம் – வடக்கு மாகாண முன...
ஜப்பானிய நிறுவனங்களின் நம்பிக்கையை மீளப் பெற இலங்கை முயற்சிக்க வேண்டும் - கொழும்பில் உள்ள ஜப்பானிய த...
|
|
|
ஐ.நா தீர்மானத்தை அமுல்படுத்தச் செலவாகும் நிதியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க பயன்...
எலிக்காய்ச்சல் பரவும் ஆபத்தான மண்டலங்களாக அடையாளம் காணப்பட்ட 17 நிர்வாக மாவட்டங்களிலுள்ள முக்கிய இட...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் - போட்டியிலிருந்து விலகுவது குறித்து பைடன் தீவி ஆலோசனை - அமெரிக்க ஊடகங்கள்...


