வெளிநாட்டுக் கடன்களை முகாமைத்துவம் செய்து சிறந்த பொருளாதார முறைமையைப் பேணவேண்டும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!.

Saturday, July 13th, 2024

நாட்டில் வெளிநாட்டுக் கடன்களை முகாமைத்துவம் செய்து சிறந்த பொருளாதார முறைமையைப் பேண வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிங்கிரிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளது.கடன் மறுசீரமைப்பினால் மீளச் செலுத்த வேண்டியிருந்த கடன் தொகையில் 8 பில்லியன் டொலர் நிவாரணம் கிடைத்துள்ளது.

கடனைச் செலுத்துவதற்கான காலவகாசம் 2043 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லாவிட்டால் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சரிவடையலாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

00

Related posts:


தனியார்துறை ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை 20 இலட்சமாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் - தொழில் அ...
டெங்கு அபாய வலயங்களாக 67 இடங்கள் அடையாளம் - மூன்று நாட்களில், 806 டெங்கு நோயாளர்கள் அடையாளம் எனவும் ...
சீ தமிழ் சரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷாவுக்கு...