மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் திருத்த அரசாங்கம் நடவடிக்கை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Tuesday, July 9th, 2024
எதிர்காலத்தில் மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் திருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த புதிய மின் கட்டணக் கட்டணம் ஜூலை 18 முதல் அமலுக்கு வரும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 0-30 யுனிட்களுக்கு இடையே ஒரு யுனிட்டிற்கு விலை ரூ.8 இலிருந்து ரூ.6 வரையும், 30-60 யுனிட்களுக்கு இடையே ஒரு யுனிட்டிற்கு ரூ.20 இலிருந்து ரூபா 9 வரையும், 60-90 வரையிலான யுனிட்களுக்கு இடையே ஒரு யுனிட்டிற்கு ரூ.30 இலிருந்து 18 ரூபா வரை, 12 ரூபாவினாலும்,
90-180 யுனிட்களுக்கு இடையே ரூ.50 இலிருந்து 30 ரூபா வரைக்கும் 20 ரூபாவிலும் மின்கட்டனத்தினை குறைக்க தான் பொதுப் பயன்பாடுகள் ஆணையத்திடம் பரிந்துரைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மெனிங் சந்தையுடன் தொடர்புபட்டு இதுவரை பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தாதவர்கள் உடனடியாகத் தொடர்பு கொ...
தடையை நீக்குவோம் - அமைச்சர் நாமலின் அறிவிப்பு!
இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து இந்தியா எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை - வெளிவிவகார அமைச்சர் ஜ...
|
|
|


