பதுளையில் கோர விபத்து – லொறி கவிழ்ந்ததில் நால்வர் உயிரிழப்பு!
Friday, July 5th, 2024
பதுளையில் லொறியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். சொரனாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) நண்பகல் 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொனராகலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் வீதி நிர்மாணப் பணிகளுக்காக சென்ற போது விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
000
Related posts:
மக்களின் வறுமையை விலைபேசும் கூட்டம் நாமல்ல - ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் தோழர்...
ஒவ்வொரு செயற்பாடுகளும் பேதங்களற்ற வகையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன - ஜனாதிபதி தெரிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் - மத்திய கல்லூரியில் முன்னாயத்த கள ஆய்வு!
|
|
|


