ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் உதயன் காலமானார் – அன்னாருக்கு ஈ.பி.டி.பியின் அஞ்சலி மரியாதை!

Friday, June 28th, 2024

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சில்வேஸ்திரி அலஸ்ரின் ( தோழர் உதயன்) மாரடைப்பால் காலமானார்.

தோழர் உதயன் என அழைக்கப்படும் எமது கட்சியின் சிரேஷ்’ட தோழரான சில்வேஸ்திரி அலஸ்ரின் சிறிது காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் (28.06.2024) இன்றையதினம் காலமானார்.

அவர் எமது கட்சியின் வளர்ச்சிக்காகவும் மக்களின் விடியலுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து நின்றவர்.அவருக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சிசி தனது அஞ்சலி மரியாதையை செலுத்தகின்றது.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் உதயன் தோழரின் இறுதி கிரியை 30.06.2024 ஞாயிற்றுக்கிழமை, நெடுந்தீவில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

கடந்த காலத்தின் குறைகள் தொடர்பில் விவாதித்துக்கொண்டிராது, நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டு -...
கையிருப்பில் இருக்கும் உரத்தினை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ...
மக்களை மீட்பதற்கான பொறிமுறை, போராட்டம் இல்லாத அரசியல் என்பனவே நாட்டுக்கு இன்று தேவையாக உள்ளது - வெ...