அமெரிக்காவின் சிறப்பு அங்காடி ஒன்றில் துப்பாக்கிச் சூடு – 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் வரை படுகாயம் என தகவல்!
Saturday, June 22nd, 2024
அமெரிக்காவின் ஆர்கான்சஸ் பகுதியிலுள்ள சிறப்பு அங்காடி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்ட பதில் தாக்குதலில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட சந்தேக நபரும் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆர்கான்சஸ் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 2 காவல்துறை உத்தியோகத்தர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிபடத்தக்கது
000
Related posts:
சர்வதேச சட்டங்களை சீனா மீறுகிறது - அமெரிக்கா குற்றச்சாட்டு!
முன்னெச்சரிக்கை நடைமுறைகளை பின்பற்றுமாறு பொதுமகளிடம் இராணுவ தளபதி வேண்டுகோள்!
ஐரோப்பிய நாடுகளுக்குள் பாகிஸ்தான் விமானங்கள் நுழைவதற்கு தடை!
|
|
|


