போதைப்பொருள் விற்பனை செய்த இலங்கைப்பெண் குவைத்தில் கைது!
Wednesday, September 14th, 2016
குவைத்தில் போதைப்பொருள் வைத்திருந்த இலங்கை பெண்ணொருவரை அந்நாட்டு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த பெண் 600 போதை மாத்திரைகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார். அழகு நிலையமொன்றின் முகாமையாளர் என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எகிப்திய பிரஜை ஒருவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்ட பின்னர், அவர் குறித்த பெண்ணிடம் போதைப்பொருள் இருப்பதை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையிலேயே குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Related posts:
நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற தேசிய சபையின் நியமனங்கள் தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ...
முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு மின்சாரக் கட்டணம் நிலையானதாகவும் நியாயமானதாகவும் இருப்பது அவசியம் - நிகழ...
யாழ் - நீதிமன்றின் பதிவாளர் முன்நிலையில் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்ட கோப்பாய் பொலிஸ் நிலையம்!
|
|
|


