வருடாந்தம் 800 தொன் பிளாஸ்டிக் கழிவுகள் நீர் நிலைகளில் சேர்கின்றது – சுற்றாடல் துறைசார் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவில் கண்டறிவு!
Friday, June 7th, 2024
வருடாந்தம் 800 டன் பிளாஸ்டிக் கழிவுகள் நீர் நிலைகளில் சேர்வதாக சுற்றாடல் துறைசார் நாடாளுமன்ற மேற்பார்வைக் குழுவில் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் வருடாந்தம் 1,600 பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக குறித்த மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
முறையான பிளாஸ்டிக் மீள்சுழற்சி செயன்முறையின் ஊடாக, சுற்றாடலுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ளமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலிருந்து அகற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்கான, விசேட வேலைத்திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரசாங்க வைத்தியசாலைகளில் வாகன அனுமதி பத்திரத்துக்கான பரிசோதனை வசதி!
இரசாயன உரத்திற்கு அரச மானியம் வழங்கப்படமாட்டாது - பசுமை விவசாய கொள்கைக்கு இணங்காத அதிகாரிகள் விலகிச்...
கடந்த 2 வாரங்கள் 4000 டெங்கு நோயாளர் – நிலைமை மோசமடைவதாக எச்சரிக்கை!
|
|
|


