வேலைத் திட்டங்களுக்கான பெயர்கள் மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் மொழி மாற்றம் செய்து பயன்படுத்துவது அவசியம் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, May 30th, 2024


அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தும் எமது பிரதேச மக்கள் விளங்கிக் கொள்ளும் வகையில் மொழி மாற்றம் செய்து பயன்படுத்துவது அவசியம் என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் மக்களுக்கு
புரிந்து கொள்ளும் பட்சத்திலேயே, குறித்த திட்டங்களுடன் எமது மக்கள் ஆத்மார்த்தமான ஈடுபாட்டை வெளிப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

யாழ் மாட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலிலேயே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts: