வேலணை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகளை வினைத்திறனாக முன்கொண்டு செல்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவுடன் கலந்துரையாடல்!
Wednesday, May 22nd, 2024
வேலனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனுடன் முன்கொண்டு செல்வது தொடர்பாக, அதன் நிர்வாகத்தினர் அமைச்சர் டக்ளஸ் தோவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.
குறித்த சந்திப்பு இன்றையதினம் அமைச்சரின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே மருதங்கேணி பிரதேச செயலகத்தில் கடந்த காலங்களில் கடமையாற்றிய நிலையில், இடமாற்றம் பெற்றுள்ள உத்தியோகத்தர்கள் அமைசசர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து நன்றி தெரிவித்ததிருந்தனர்..
இடமாற்றக் பிரமாணக் கோவைக்கு அமைவாக பின்தங்கிய பிரதேசத்தில் தமது சேவைக் காலத்தினை நிறைவு செய்த போதிலும், விரும்பிய பிரதேசங்களுக்கு இடமாற்றத்தினை பெற்றுக் கொள்வதில் காணப்பட்ட நடைமுறை சிக்கல்களுக்கு அமைச்சரின் தலையீட்டினால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பத்தினிபுரம் கிராம மக்களது மயான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் தேவானந்தா!
உள்ளூராட்சி தேர்தலை வென்றெடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்போம் -வேட்புமனு தாக்கல் செய்த...
அமைச்சர் டக்ளஸ் முல்லைத்தீவு விஜயம் - கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பி...
|
|
|


