இலங்கையில் அடுத்த வருடம்முதல் லஞ்ச் சீற்றுக்கு முற்றாக தடை – மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை !
Monday, May 20th, 2024
இலங்கையில் அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்களை முற்றாக தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் லஞ்ச் சீட் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனையை தடை செய்வது தொடர்பான சட்டப் பணிகளை மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்திற்கமைய, மக்கும் லஞ்ச் சீட்களை உற்பத்தி செய்து இறக்குமதி செய்வதும் சாத்தியமில்லை என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
தரமற்ற லஞ்ச் சீட் விற்பனையால் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், லஞ்ச் சீட்களை முற்றிலுமாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தென்மாராட்சியில் நெல் விதைப்பு ஆரம்பம்!
அரச நிறுவன பிரதானி பதவிகளுக்கு 60000 பேர் விண்ணப்பம்!
தேர்தலுக்கு தடையான அரச அதிகாரிகளை விசாரிக்கக் கோரி மாற்று கொள்கைகளுக்கான கேந்திர நிலையத்தினால் உயர்ந...
|
|
|


