உள்ளூராட்சி தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வது நடைமுறை சாத்தியம் இல்லை – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!.
Thursday, May 16th, 2024
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வது நடைமுறை சாத்தியம் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சட்டம் மற்றும் உயர்நீதிமன்றத்தின் ஒப்புதலுக்குப் பின்னரே உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
சமூக மற்றும் இன அடிப்படையிலான பிரச்சினைகளுக்கு தீர்வு - ஜனாதிபதி!
கொரோனா பாதிப்பு குறித்து போலியான தரவுகள் வெளியிடப்படவில்லை – நவம்பர் மாதத்திற்குள் 18 வயதுக்கு மேற்ப...
ஆரம்ப சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இலங்கைக்கு உலக வங்கியிடம் இருந்து மேலும் 150 மில்லியன் டொலர்!
|
|
|


