யாழ் மாவட்டத்தின் விவசாய முன்மாதிரி கிராமமாக தெரிவானது ஈவினை புன்னாலைக்கட்டுவன் கிராமம் – அமைச்சர் டக்ளஸ் விவசாயிகளின் எதிர்பர்ப்புகள் குறித்து ஆராய்வு!
Saturday, May 11th, 2024
நாடு தளுவிய ரீதியில் விவசாயத்தை நவீனமயப்படுத்தி விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு மாவட்ட ரீதியில் முன்மாதிரி கிராமத்தை தெரிவுசெய்யும் முகமாக யாழ் மாவட்டத்தில் புன்னாலைக்கட்டுவன் ஈவினை கிராமம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசம் பிரதேச மக்களின் விருப்பத்தோடு தெரிவாகியுள்ள நிலையில் அப்பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விவசாய மக்களின் பிரச்சினைகள் மற்றும் எதிர்பர்ப்புகள் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.
இதேவேளை ஜனாதிபதியின் நிகழ்ச்சி திட்டத்திற்கு அமைவாக நாடு தளுவிய ரீதியில் விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மாவட்ட ரீதியில் ஒரு முன்மாதிரி கிராமத்தை தெரிவுசெய்யும் திட்டம் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
எல்லாளனும் துட்டகைமுனுவும் இன ரீதியாக போரிடவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!
மின் கட்டணப் பட்டியல நீண்ட காலமாகக் கிடைத்திராத மக்களது பாக்கித் தொகைகளை மீளச் செலுத்துவதற்கு கால அவ...
குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாக கட்சி நிதியிலிருந்து ஊதியம் வழங்கும் வகையில் இரு சிற்றூழியர்கள...
|
|
|


