குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் – ஏற்படும் இடையூறுகளை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!

Friday, May 10th, 2024


………
புங்குடுதீவு, குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவிற்கும் குறிகாட்டுவானுக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வடதாரகை மற்றும் குழுதினி படகுகள் இறங்குதுறையில் நீண்ட நேரம் திறுத்தப்படும் போது ஏற்படும் சிரமங்கள் இடையூறுகள் தொடர்பில் ஆராய்ந்துகொண்டார்.

பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினராலும் கிடைக்கப்பெற்ற முனைப்பாடுகளை அடுத்தே இந்த நேரடி கள விஜயம் இடம்பெற்றது.

குறித்த விஜயத்தின் போது நிலைமைகளை பார்வையிட்டதுடன், ஏற்படும் இடையூறுகளை அகற்றுவது தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி இலகுவான வழிமுறைகளை ஏற்படுத்தி கொடுத்தார்.

குறித்த விஜயத்தின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் வேலனை பிரதேச செயலர்,  நெடுந்தீவு   பிரதேச செயலர் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் படகு உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் .
00

Related posts:

தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மட்டும் அக்கறை காட்டும் வட மாகாண சபை அவற்றைச் செயற்படுத்த முயல...
இன நல்லிணக்கத்தில் ஈ.பி.டிபி யினராகிய நாம் உளப்பூர்வமாக செயற்பட்டு வருவதால் வெற்றிகண்டுள்ளோம் - நா...
சுயலாப கூக்குரல்கள் தொடர்பில் மக்களும் ஊடகங்களும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும். - அமைச்சர் டக்ள...

நலன்புரி முகாம்களை மூடுவதால் மட்டும் மீள்குடியேற்றம் முடிந்துவிட்டதாகக் கருத முடியாது! - டக்ளஸ் தே...
தேசிய நல்லிணக்கத்தினூடாக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும் முன்னுரிமை அடிப்படையில் தீ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதான துறைமுக முகாமைத்துவ அத...