காசா மனிதாபிமான துயரங்களுக்கு கடும் எதிர்ப்பு – இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் நிறுத்தியது துருக்கி!
Saturday, May 4th, 2024
காசா பகுதியில் தாக்குதல்கள் மற்றும் உதவி வழங்குவதில் தடங்கல் ஏற்படுத்திய மனிதாபிமான துயரங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துருக்கி நிறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஸா பகுதிக்கு தேவையான அளவு உதவிகளை தடையின்றி வழங்க இஸ்ரேல் அனுமதி வழங்கும் வரை இது தொடரும் எனவும் துருக்கியின் வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கி மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான வர்த்தக பரிவர்த்தனை கடந்த ஆண்டு 7 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் சர்வாதிகாரியாக செயற்படுவதாக இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சிம்பாப்பேயின் புதிய ஜனாதிபதி நியமனம்!
நீர் மின் உற்பத்தி 60 சதவீதமாக அதிகரிப்பு - சில இடங்களில் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் எனவும்...
டெலிகொம் மற்றும் லங்கா ஹொஸ்பிடல்ஸ் பங்குகளை விற்பனை செய்ய அனுமதி!
|
|
|


