2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவு!
Thursday, May 2nd, 2024
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் 2024ஆம் ஆண்டுக்கான முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் (03.05.2024) நிறைவடையவுள்ளது.
இதேநேரம் பாடசாலைகளின் முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகும்.
அத்துடன் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளின் மூன்றாம் கட்டம் மே மாதம் 31ஆம் திகதி முடிவடைகிறது.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
மூவாயிரத்து 527 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 15ஆம் திகதி வரை க.பொ.த சாகதாரண பரீட்சைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
வெளியானது புலமைப்பரிசில் பரீட்சை - அகில இலங்கை ரீதியில் 198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப...
பாடசாலை மாணவர்களுக்கு 95 வீதமான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது; - கல்வி அமைச்சு அறிவிப்பு!
2024 ஆம் ஆண்டு இரண்டு பிரதான தேர்தல்கள் நடைபெறும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
|
|
|


