உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – அஞ்சலி செலுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி!

Thursday, April 18th, 2024

உயிர்த்த ஞாயிறு தின’ தாக்குதலில் உயிரிழந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21) காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இத்தாக்குதல் தொடர்பிலான கவனத்தை ஈர்க்கும் வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆன்மீக தரப்பினரின் கவனத்தை ஈர்ப்பதாகவும்,

அதன்படி 20 ஆம் திகதி பிற்பகல் முதல் 21 ஆம் திகதி காலை வரை கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் இருந்து சமய ஊர்வலம் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியர் தேவாலயத்தில் இரவு முழுவதும் பிரார்த்தனை செய்துவிட்டு,  காலை 8.30 மணியளவில் துவாபிட்டிய தேவாலயத்தை இவ் ஊர்வலம் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

அரசியல் அதிகாரம் எமது கைகளில் இருந்திருந்தால் மக்கள் இன்று வீதிக்கிறங்கவேண்டிய நிலை உருவாகியிருக்காத...
உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஜனநாயகத்திற்கும் மக்களின் வாக்குரிமைக்கும் கிடைத்த மாபெரும் வரலா...
சுய பூட்டுதல் வரவேற்கத்தக்கது - சிறு தொழில்கள் செய்து வாழ்க்கையை நடத்தும் மக்களையும் கருத்தில் கொள்ள...

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில்  சுமந்திரன் MP அடாவடி: வெளிநடப்புச் செய்தார் மாகாணசபை உறுப்பினர்!
தேர்தல் சட்டங்களை மீறுவோரின் பிரஜாவுரிமை இரத்து செய்யப்படலாம் என தேரர்தல் ஆணையாளர் எச்சரிக்கை!
சேத மதிப்பீடுகள் தொடர்பில் பரப்பப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. - தொல்பொருள் சேதம் தொடர்ப...