தீவகத்தில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சார திட்டம் – நெடுந்தீவிலும் பூமி பூஜை!
Sunday, April 7th, 2024
தீவகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான வேளித்திட்டத்தின் மற்றுமொரு முன்னேற்பாடாக இன்று நெடுந்தீவிலும் பூமி பூஜை நிகழ்வு (7.04.2024) இடம்பெற்றது.
இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் இந்த பாரிய மின்சார திட்டமானது கடந்தவாரம் அனலைதீவில் முன்னெடுக்கப்பட்டது.
இன்நிலையில் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான காற்றாலை அமையவுள்ள
நெடுந்தீவில் இந்திய நிறுவன மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் “பூமி பூஜை” நிகழ்வு இன்று காலை இடம்பெற்றமை முறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
பேரிடர் உயிரிழப்பு 82 ஆக அதிகரிப்பு!
50 பாடசாலை மாணவர்களுக்கு மாதாந்தம் ரூபா 5 ஆயிரம் வீதம் 5 வருடங்களுக்கு புலமைப்பரிசில்: யாழ். படைத் த...
ஒரே நாடு, ஒரே சட்டம் இவ்வருட இறுதிக்குள் உருவாக்கப்படும் - புதிய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் ஒன்ற...
|
|
|


